தேவையானப் பொருள்கள்:
பாசுமதி அரிசி (அ) பச்சரிசி_2 கப்
கொண்டைக் கடலை_3 கைப்பிடி
பெரிய வெங்காயம்_பாதி
சின்ன வெங்காயம் _5
தக்காளிப் பழம்_1
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_3 பற்கள்
பச்சை மிள்காய்_1
மிளகாய்த் தூள்_1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தயிர்_1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_1 கொத்து
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம்_1/2 டீஸ்பூன்
முந்திரி_5
செய்முறை:
கொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து விடவும்.இப்போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நன்றாக வெந்ததும் நீரை வடித்து விடவும். அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற வைக்கவும்.சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கவும்.இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து வதக்கி வெங்காயம்,தக்காளி அரைத்ததை ஊற்றி நன்றாக வதக்கவும்.அத்துடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.(ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி,கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும்.இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள தயிர்,வெஙகாயப் பச்சடி பொருத்தமாக இருக்கும்.
மறுமொழி இடுக