தேவையானப் பொருள்கள்:
பிஞ்சு சுரைக்காய்_1
வேர்க்கடலை_2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது
செய்முறை:
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்கவும்.அதே வாணலியில் மிளகாயை எண்ணெய் விடாமல் லேசாக,கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.வேர்க்கடலை ஆறியதும் தோலுரித்து சுத்தம் செய்து,அதனுடன் வறுத்த மிளகாயைச் சேர்த்து மில்ஸியில் போட்டு கொரகொரப்பாகப் பொடிக்கவும்.
சுரைக்காயைக் கழுவித் துடைத்துப் பொடியாக நறுக்கி ஒரு அடி கனமானப் பாத்திரத்தில் போட்டு ஒரு டீஸ்பூன் தண்னீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.சுரைக்காய் வேகும்போதே அதிலிருந்து தண்ணீர் வெளியேறும்.காய் வேக அதுவே போதுமானது.தண்ணீர் குறைவாக வைப்பதால் அடி பிடிக்க வாய்ப்புண்டு.எனவே அடிக்கடி கிளறிவிடவும்.வெந்து வரும்போதே உப்பு,பெருங்காயம் சேர்த்துக் கிளறவும்.நன்றாக வெந்த பிறகு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.
இதை எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.
4:36 பிப இல் ஜூலை 6, 2012
எண்ணெயே இல்லாமல் ஒரு சுவையான பொரியல் செய்முறையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! நான் பெருங்காயம் சேர்க்காமல்தான் செய்தேன், வெறும் சாதத்துடன் சாப்பிடவே அருமையா இருந்தது! 🙂
5:12 பிப இல் ஜூலை 6, 2012
“வெறும் சாதத்துடன் சாப்பிடவே அருமையா இருந்தது”_கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு.பெருங்காயம் சேர்ப்பது வாயுவான காய் என்பதால்தான்.
எங்க பாட்டி செய்வது.அப்போல்லாம் சாப்பிட மாட்டேன்.இப்போ எங்க வீட்டில் நான் மட்டுமே சாப்பிடுவேன்.சாப்பிட்டுப் பார்த்து கருத்தும் சொல்லியாச்சு.நன்றி மகி.