தேவையானப் பொருள்கள்:
ரவை_2 கப்
சின்ன வெங்காயம்_7
இஞ்சி_ஒரு சிறு துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
,
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
சீரகம்
முந்திரி
பெருங்காயம்
கிராம்பு_1
பிரிஞ்சி இலை_1
கறிவேப்பிலை
செய்முறை:
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும் மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைகவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு ரவையைக் கொட்டி சூடு வர வறுத்துக்கொள்ளவும்.எண்ணெய் விடுவது ரவையைத் தண்ணீரில் கொட்டிக் கிளறும்போது கட்டி தட்டாமல் இருக்கத்தான்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் வெங்காயம் வதக்கவும்.
அடுத்து இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஒன்றுக்கு இரண்டு என தண்ணீர் விட்டு,உப்பு,மஞ்சள் தூள் போட்டு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.
தண்ணீர் கொதி வந்ததும் ரவையை சிறிது சிறிதாகக் கொட்டி ஒரு தோசைத் திருப்பியால் விடாமல் கிளறி விடவும். கரண்டிக்குப் பதிலாக whisk ஐப் பயன்படுத்தினால் கட்டித் தட்டாமல் வரும்.எல்லா ரவையையும் கொட்டிக் கிளறிய பிறகு எலுமிச்சை சாறு விட்டுக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னிதான் பொருத்தமாக இருக்கும்.
3:11 முப இல் ஜனவரி 28, 2011
கிச்சடி வாஸனையாக இருக்கு. செய்து சாப்பிடலாம்.வாருங்கள் எல்லோரும்.
12:28 பிப இல் ஜனவரி 28, 2011
‘கிச்சடி வாஸனையாக இருக்கு’னு நீங்களே சொல்லிட்டீங்க.எனக்கு சந்தோஷமாக உள்ளது.வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றி.