தேவையானப் பொருள்கள்:
கோதுமை ரவை_2 கப்
பச்சைப் பருப்பு_1/2 கப்
மஞ்சள் தூள்_1/2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நெய்_2 டீஸ்பூன்
மிளகு_ஒரு டீஸ்பூன்
சீரகம்_ஒரு டீஸ்பூன்
முந்திரி_10
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை
செய்முறை:
இதன் செய்முறையும் சாதாரண வெண்பொங்கல் செய்வது மாதிரிதான்.
முதலில் பச்சைப் பருப்பை வெறும் வாணலியில் சிவக்க, வாசம் வரும்வரை வறுத்து ஆறியதும் கழுவிவிட்டு,தேவையானத் தண்ணீர்விட்டு,மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பாதி வெந்த நிலையில் கோதுமை ரவையைக் கழுவிவிட்டு (வறுக்க வேண்டாம்)ஒன்றுக்கு மூன்று அல்லது அதற்கும் மேல் தண்ணீர் விட்டு,உப்பு போட்டு பருப்புடன் சேர்த்து வேகவிடவும்.இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து குழைய வேக வேண்டும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து பொங்கலில் கொட்டிக் கிளறி இறக்கவும்.அல்லது தாளிப்பு முடிந்ததும் பொங்கலை வாணலியில் கொட்டிக் கிளறி இறக்கலாம்.
பொங்கலுக்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.
மறுமொழி இடுக