தேவையானப் பொருள்கள்:
முந்திரி_1/2 கப்
வேர்க்கடலை_1/2 கப்
கடலை மாவு_3 டீஸ்பூன்
அரிசிமாவு_ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
இஞ்சி_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்
உப்பு_தேவைக்கு
கடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.தோலை நீக்க வேண்டாம்.
அடுத்து சிறிது நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.
ஆறியதும் இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
கடலை மாவு,அரிசிமாவு,மிளகாய்த்தூள்,பெருங்காயம்,உப்பு,இஞ்சி (பொடியாக நறுக்கி),கறிவேப்பிலை (கிள்ளிப்போட்டு) இவற்றை ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
இக்கலவையை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை முந்திரி,வேர்க்கடலை இவற்றில் சேர்த்து குலுக்கிவிட்டு,ஒரு 5 நிமி அப்படியே வைக்கவும்.
அடுத்து அதில் லேசாகத் தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூனால் கலக்கிவிடவும். மீண்டும் ஒரு 5 நிமி வைக்கவும்.
அடுத்து மீதமுள்ள கலவையை சேர்த்து மீண்டும் ஸ்பூனால் கலக்கி விடவும்.
இப்போது முந்திரி,வேர்க்கடலை இரண்டுக்கும் coating கொடுத்தமாதிரி இருக்கும்.
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொன்றாக எண்ணெய் கொண்டமட்டும் போட்டு பொரித்தெடுக்கவும்.
நல்ல மொறுமொறுப்பான,சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ் தயார்.
இதனை தனி வேர்க்கடலையிலோ அல்லது தனி முந்திரி பருப்பிலோ கூட செய்யலாம்.
மறுமொழி இடுக