தேவையானப் பொருள்கள்:
கேழ்வரகு மாவு_ஒரு கப்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய்விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு மாவிற்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
ஒரு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
மாவு கட்டித் தட்டாமல் இருக்க whisk ஐப் பயன்படுத்தலாம்.
எல்லா மாவையும் கொட்டியபிறகு தீயை மிதமாக வைத்து,கெட்டியாக ஆகும்வரை விடாமல் கிண்டிவிட வேண்டும்.
நன்றாக வெந்து,வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும்.
இதற்கு தேங்காய் சட்னி,மீன் குழம்பு,கருவாட்டுக் குழம்பு போன்றவை பொருத்தமாக இருக்கும்.
இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.
மறுமொழி இடுக