தேங்காய் சாதத்திற்கு தேர்ந்தெடுக்கும் தேங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.கொஞ்சம் இனிப்பான,சதைப்பற்றுள்ளத் தேங்காயானால் சுவை அதிகமாக இருக்கும்.
முந்திரி,வேர்க்கடலை இவற்றைப் போட வேண்டுமென்பதில்லை. விருப்பமானால்,வீட்டில் இருந்தால் போடலாம்.
சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கும்போது அப்பளத்தைப் பொரித்து,நொருக்கிப் போட்டும் இறக்கலாம்.
தேவையானவை:
அரிசி_ஒரு கப்
தேங்காய்ப்பூ_ஒரு கப்
இஞ்சி_சிறுதுண்டு
பச்சைமிளகாய்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
முந்திரிபருப்பு
பெருங்காயம்
காய்ந்தமிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை:
அரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக வரும் பக்குவத்தில் வடித்து,பிறகு ஆறவைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக வதக்கவும்.இது வதங்கும்போதே சிறிது உப்பை ஸ்ப்ரே பன்னவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்து வடித்திருக்கிறோம்.
தேங்காய்ப்பூ நன்றாக வதங்கி சிவந்து வரும்போது ஆறிய சாதத்தைக்கொட்டிக் கிளறவும்.சாதம் சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
மிக எளிதாக செய்யக்கூடிய தேங்காய் சாதம் தயார்.
இதற்கு அப்பளம்,வத்தல்,பருப்புத் துவையல்,வறுவல்,பொரியல் எல்லாமே நன்றாக இருக்கும்.
நிறைய சாத வகைகள் செய்யும்போது இதையும் செய்தால் கலர்கலரான சாதங்களுக்கு மத்தியில் பளீர் வெண்மையுடன் கலக்கலாக இருக்கும்.இதனை மீதமான சாதத்திலும் செய்யலாம்.
11:02 முப இல் ஏப்ரல் 20, 2012
வெள்ளை வெளேர் தேங்காய் சாதம் அருமையாக இருக்கிறது! தேங்காயை மிக்ஸியில் pulse செய்து போடுவீங்களா? அந்த கருப்பு வராமல் வெளேர்னு இருக்கே? 🙂
11:16 முப இல் ஏப்ரல் 20, 2012
‘அந்த கருப்பு வராமல்’_தேங்காய்ப் பத்தையில் இருக்கும் கருப்புதானே.அதை எடுத்துவிட்டுத்தான் எல்லாவற்றிலும் சேர்ப்பேன்.ஆமாம் மகி,pulse செய்துதான் போடுவேன்.
6:33 முப இல் ஏப்ரல் 22, 2012
சாதம் ருசியானது. தேங்காய்த் துருவியில் தேங்காயைத் துருவினால் அடிபாகத்தைத் தனியாக எடுத்து கூட்டு,குழம்பு என்று
சேர்த்து உபயோகிக்கலாம். சாதத்துக்கு வறுக்கும் போது தேங்காயில்
துளி சர்க்கரை சேர்க்கலாம். சொன்னாலொழியத் தெறியாது. நன்றாக இருக்கு தேங்காசாதம்.
9:56 முப இல் ஏப்ரல் 22, 2012
காமாஷி அம்மா,
தேங்காயின் அடிப்பகுதியை சேர்க்காமல் அப்படியேப் பழகிவிட்டது. மூட்டைமூட்டையாய் தேங்காய்கள். உடைத்து உடைத்து வீணாக்கிய நாட்களெல்லாம் உண்டு.இங்கு வந்த பிறகு ஒரு காயை வாங்கி இரண்டு வாரங்களுக்கு வைத்துக்கொள்கிறேன்.
நானும் எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதங்களுக்கு துளி சர்க்கரை சேர்ப்பேன். இதை எழுத மறந்துவிட்டேன்.நன்றி அம்மா. அன்புடன் சித்ரா.
2:09 முப இல் ஓகஸ்ட் 10, 2012
உங்கள் சமையல்குறிப்பினை இங்கே http://nilaachchoru.blogspot.com/2012/08/3.html பகிர்ந்திருக்கிறேன். நன்றி!
6:27 பிப இல் ஓகஸ்ட் 10, 2012
highschoolerz,
என்னுடைய சமையல் குறிப்பினையும் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி&நன்றி.தங்களின் முதல் வருகைக்கும் நன்றி.