தேவையானவை:
பாவக்காய்_1
கடலைமாவு_ஒரு கைப்பிடி
அரிசிமாவு_ஒரு டீஸ்பூன் அளவிற்கு
மிளகாய்த்தூள்_காரத்திற்கேற்ப
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_சிறிது
எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பாவக்காயைக் கழுவித் துடைத்துவிட்டு ஒரே அளவான வில்லைகளாக்கவும்.
ஒரு தட்டில் கடலைமாவு,அரிசிமாவு,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.
பாவக்காய் வில்லைகளை கலந்து வைத்துள்ள மாவுக்கலவையில் புரட்டி எடுக்கவும்.
ஒரு வாணலில் கொஞ்சமாக (வத்தல்/வடாம் பொரிப்பது மாதிரி)எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பாவக்காய் வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெய் கொண்டமட்டும் போட்டு பொரிக்கவும்.
ஒருபக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.
இப்போது நல்ல மொறுமொறுப்பான,சுவையான கசப்பே இல்லாத (உண்மையாகவே) பாவக்காய் சிப்ஸ் சாப்பிடத்தயார்.
சாதத்துடனோ அல்லது மாலை நேர ஸ்நாக்ஸாகவோ சாப்பிடலாம்.
7:44 முப இல் ஓகஸ்ட் 20, 2012
எளிதான குறிப்பு… நன்றி…
சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது….
தொடர வாழ்த்துக்கள்…
7:44 முப இல் ஓகஸ்ட் 21, 2012
திண்டுக்கல் தனபாலன்,
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
4:41 முப இல் ஓகஸ்ட் 21, 2012
நான் கூட இதே மாதிரி செய்வேன். காற்று புகாத டப்பாவில் வைத்தால் அதிக நாட்கள் கூட உபயோகிக்கலாம். நல்ல ருசியானது.
7:52 முப இல் ஓகஸ்ட் 21, 2012
காமாட்சி அம்மா,
நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா!இப்போதான் முதல்முறையாக செய்தேன்.நல்ல ருசியாகவே இருந்தது.இந்தவாரம் மார்க்கெட்போய் நிறைய வாங்கிவந்து செய்ய வேண்டும்.அன்புடன் சித்ரா.
7:54 முப இல் ஓகஸ்ட் 21, 2012
ரஞ்சனி,
நானும் நினைத்தேன் உங்களுக்குப் பிடிக்குமென்று.நன்றி.