வெங்காயத் தாள் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் சீஸனில் மட்டுமே வரும்.கீழே படத்திலுள்ளதுபோல் இரண்டு விதமாகக் கிடைக்கும்.மெல்லியதாக,புல் மாதிரியான தாள், இது மிகவும் பிடிக்கும்.இது இல்லை என்றால் மட்டுமே பெரிய தாள் வாங்குவேன்.வெங்காயத் தாளை சாதாரண வெங்காயம் மாதிரியே சாம்பார்,பொரியல்,கூட்டு,குருமா என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.
சாம்பார் வைக்கும்போது மட்டும் புளி சேர்க்காமலும்,தாளிப்பில் சிறிது பெருஞ்சீரகமும் சேர்த்தால் சூப்பராக இருக்கும்.
தேவையானவை:
துவரம் பருப்பு_1/4 கப்
வெங்காயத் தாள்_1/2 கட்டு
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பச்சை மிளகாய்_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன் (போட மறந்தாச்சு)
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_நான்கைந்து (வாசனைக்கு)
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,2 பூண்டிதழ் சேர்த்து மலர வேகவைக்கவும்.
வெங்காயத் தாளின் வேரை மட்டும் நறுக்கித் தள்ளிவிட்டு,மீதமுள்ள பகுதியைக் கழுவிவிட்டு,விருப்பமான நீளத்தில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம்,தக்காளியைப் பொடியாகவும்.பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறியும் வைக்கவும்.
குழம்பு வைக்கப்போகும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி,வெங்காயத் தாள் என அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.திட்டமாகத் தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.மற்ற சாம்பார்போல் நீண்ட நேரம் கொதிக்கத் தேவையில்லை.
இப்போது நல்ல சுவையான சாம்பார் ரெடி.இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.இட்லி,தோசையுடனும் பொருத்தமாக இருக்கும்.
3:09 பிப இல் ஜனவரி 7, 2013
Sambar looks delicious…simple n tasty!
8:31 முப இல் ஜனவரி 8, 2013
வருகைக்கு நன்றி மகி.
6:21 பிப இல் ஜனவரி 7, 2013
ithuku per venkaya thaal ah..market l parthirukuren…ipoluthu than peyarai therinthu konden..nandri chitrasundar.
8:34 முப இல் ஜனவரி 8, 2013
ஞானகுரு,
வெங்காயத்தாளை வாங்கியாச்சா!உங்க ஊர்ல என்னன்னு சொல்லுவாங்க?
8:38 முப இல் ஜனவரி 8, 2013
inum illa chitrasundar..peyare theriyathu..market la irukum parthuruken…therinthu kollavum virupapatathu illai..adutha murai paarthal enavendru ketkiren 🙂
8:47 முப இல் ஜனவரி 8, 2013
ஞானகுரு,
இனி வாங்கி சாம்பார் செய்ததுபோக மீதமானதை தோசை,ஊத்தப்பம்,வடை என எல்லாவற்றிலும் சேர்த்து செய்யச்சொல்லுங்க.நல்லாவே இருக்கும்.
1:54 முப இல் ஜனவரி 8, 2013
சித்ரா,
வெங்கயதாளில் சாம்பார் வைக்கலாம் என்பது புது செய்தி எனக்கு.
நீங்கள் அழகாக விளக்கியுள்ளபடியே செய்து பார்க்க வேண்டும்.
உபயோகமான பகிர்வு,
ராஜி
8:42 முப இல் ஜனவரி 8, 2013
ராஜலஷ்மி,
நல்ல வாசனையோட,சுவையாகவும் இருக்கும்.செய்து பாருங்க.
உங்க பெயரை நான் எழுதியது சரியான்னு கொஞ்சம் சரிபார்த்திடுங்க.இனி இப்படித்தான் எழுதப்போகிறேன்.
6:24 முப இல் ஜனவரி 9, 2013
சரியாகவே எழுதியிருக்கிறீர்கள்.
ராஜி
6:44 பிப இல் ஜனவரி 10, 2013
நன்றி ராஜலஷ்மி.
6:26 முப இல் ஜனவரி 8, 2013
சுவையான சாம்பார் ..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
8:43 முப இல் ஜனவரி 8, 2013
மணிராஜ்,
வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.
8:52 முப இல் ஜனவரி 8, 2013
kandipa seiya solren..nan firstu first unga blog la padichu sapta kaepai kool stop ayiruchu 😦 cha ipo than gyabagam varudhu