தேவையானவை:
ப்ரோக்கலி _ ஒரு முழு பூ
பொடித்த மிளகு _ காரத்திற்கேற்ப
பூண்டு _ தேவைக்கேற்ப
எண்ணெய்
உப்பு
இனி எப்படி செய்தால் சுவையாக இருக்கும் என பார்க்கலாம்.
ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும். பூண்டிதழ்களை ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பூக்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு போட்டு ப்ரோக்கலி பூக்களையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிவிடவும். நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். அதிகமாக வெந்துவிட்டால் அது வதங்கியதுபோல் வலவலவென ஆகிவிடும்.
வெந்த பூவை வேண்டிய அளவில் கையால் அல்லது கத்தியால் சிறுசிறு இதழ்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
ஒரு தோசைக்கல் அல்லது வாணலில் சிறிது எண்ணெய் விட்டு (ஆலிவ் எண்ணெயாக இருந்தால் நல்ல வாசனையாக இருக்கும்) தட்டிய பூண்டுகளைப் போட்டு வதக்கவும். அடுத்து ப்ரோக்கலியைச் சேர்த்து மிளகுத்தூளையும் தூவி தேவையானால் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
இது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடவோ அல்லது சும்மா அப்படியே சாப்பிடவோ அல்லது பொரியலில் சாதம் போட்டு கிளறி சாப்பிட பூண்டின் சுவையுடன் நன்றாக இருக்கும்.
4:44 முப இல் செப்ரெம்பர் 18, 2020
சித்ரா எப்படி இருக்கிராய்? நீ திரும்பவும் எழுத ஆரம்பித்தது மிக்க ஸந்தோஷம். நான் கணினி இயக்குவதையே மறந்து எதுவும் தோன்றாத நிலைமை.அரைமணி நேரம் திரும்ப எழுத்துக்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். இப்போது மும்பையில். மற்றபடி யாவும் தொடர் கதைதான். எதிலும் மாறுதலில்லை. உங்கள் யாவருக்கும் ஆசிகள். ப்ரோக்கலி பொரியல் பச்சென்று பார்க்க சாபபிட பரவசம். தப்பிலலாமல் எழுதியிருக்கேனா? அன்புடன் நல் வரவு உனக்கு.
2:49 பிப இல் செப்ரெம்பர் 18, 2020
காமாக்ஷிமா,
நல்லாருக்கேன். வரவேற்பு & ஆசிகளால் மகிழ்ச்சிமா. உங்கள் எழுத்துக்கள் அப்படியேதான் விறுவிறுப்பாக இருக்கின்றது. எவ்வளவு நாட்களாகிறது உங்களை இங்கே பார்த்து!
ப்ளாக் உள்ளே போனதும் எல்லாமே மாற்றமடைந்ததுபோல் இருந்தது. இப்போதுதான் புதிதாக ஆரம்பிப்பதுபோலும் இருக்கிறது. முடியும்போது அவ்வப்போது வந்துபோகிறேன். நன்றிமா,அன்புடன் சித்ரா.
4:25 முப இல் செப்ரெம்பர் 19, 2020
மாற்றம் அடைந்து தான் இருக்கிறது அன்புடன்