சௌசௌ கூட்டு

 

koottu

காமாக்ஷிமாவின் செய்முறையைப் பார்த்து செய்த குறிப்பு இது. அசல் குறிப்பைக் காண இங்கே செல்லவும். அதே பொருள்கள்தான், ஆனால் ஒருசில மாற்றங்களுடன் செய்திருப்பேன்.

தேவையானவை:

சிறிய பிஞ்சு சௌசௌ _  1
பச்சை வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி (காய்ந்ததாக இருந்தால் முதல் நாளே ஊறவைத்துக்கொள்ளவும்)
பச்சப்பருப்பு _ 2 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு

வறுத்து அரைக்க:

இட்லி உளுந்து _ ஒரு டீஸ்பூன்
மிளகு _ 5
சீரகம் _ ஒரு டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் _ 1
தேங்காய்ப் பூ _ 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

வேர்க்கடலையில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

20140303_081507

பச்சைப்பருப்பை லேஸாக வறுத்துக்கொள்ளவும். வறுத்தால் நல்ல வாசனை வரும், இல்லையென்றாலும் பரவாயில்லை.

ஒரு பாத்திரத்தில் பச்சைப்பருப்புடன் மஞ்சள் தூள், பெருங்காயம், துளி விளக்கெண்னெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

வெறும் வாணலியை அடுப்பில் ஏற்றி வறுக்கக் கொடுத்துள்ளவற்றில் முதலில் உளுந்து போட்டு சிவந்ததும் மிளகு, காய்ந்தமிளகாய், சீரகம் என அடுத்தடுத்து போட்டு சூடேறியதும் எடுத்துவிட்டு அதே சூட்டிலேயே தேங்காய் பூவை போட்டு வறுத்துக்கொள்ளவும். இவை ஆறியதும் முதலில் தேங்காய் இல்லாமல் பொடித்துக்கொண்டு கடைசியில் தேங்காய் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

பருப்பு முக்கால் பதம் வேகும்போது சௌசௌ, வெந்த வேர்க்கடலை இரண்டையும் சேர்த்து கிண்டிவிட்டு வேக வைக்கவும்.

காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, தேவைக்கு உப்பு போட்டு, கொதிக்கவிட்டு எல்லாம் சேர்ந்து கொதித்ததும், தாளிப்பதை தாளித்து, கூட்டில் கொட்டி கிண்டிவிட்டு, கொத்துமல்லி கிள்ளிப்போட்டு இறக்கவும்.

koottu

சாதத்துடன் சேர்த்தோ, அல்லது தொட்டுக்கொண்டோ சாப்பிட சூப்பரோ சூப்பர். முக்கியமாக உளுந்து வறுத்து சேர்த்ததால் நல்ல வாசனையுடன் அருமையாக இருந்தது.

குறிப்பை பகிர்ந்துகொண்ட காமாக்ஷி அம்மாவுக்கும் நன்றி.

 

கூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 18 Comments »

ப்ரோக்கலி கூட்டு / Broccoli kootu

broccoli kootu

தேவையானவை:

ப்ரோக்கலி பூ_ஒன்று
பச்சைப் பயறு_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_2
பச்சை மிளகாய்_1
தக்காளி_1/4 பகுதி

அரைக்க:

தேங்காய் பத்தை _2
சீரகம்_சிறிது
அரிசிமாவு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

broccoli

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி சுத்தம் செய்துகொள்ள‌வும்.தண்டு,இலைகளையும் தூக்கிப்போடாமல் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

பச்சைப்பயறை சூடுவர வறுத்து,கழுவிவிட்டு அது வேகுமளவு தண்ணீர் விட்டு,மஞ்சள்தூள்,பெருங்காயம்,இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

பாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து கிளறிவிட்டு வேகவிடவும்.

இவை எல்லாம் வெந்ததும் ப்ரோக்கலியைச் சேர்த்துக் கிளறிவிட்டு,சிறிது உப்பும் சேர்த்து கிண்டிவிடவும்.ப்ரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.இரண்டு கொதி வந்தாலே போதும்.

தேங்காய்,அரிசிமாவு,சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொதிக்கும் கூட்டில் ஊற்றி மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து ப்ரோக்கலி கூட்டில் கொட்டிக் கிளறவும்.

இது சாதம்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.

கூட்டு, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 12 Comments »

மஞ்சள் பூசணி & வேர்க்கடலைக் கூட்டு

மஞ்சள் பூசணியை எப்படி சமைத்தாலும் அதற்கேயுரிய இனிப்புச் சுவை மேலோங்கி நிற்கும்.ஒரு சிலருக்குப் பிடிக்காது.(எனக்கும்தான்).இந்தக் காயை விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு இந்த செய்முறை உதவுமே என்பதால்தான் இந்தப் பதிவு.

பார்க்க வெள்ளரிப்பழம் போலவே எவ்வளவு அழகாக உள்ளது!

        

தேவையானவை:

மஞ்சள் பூசணி_படத்திலுள்ளதில் 1/4 கீற்று
வறுத்த வேர்க்கடலை_ஒரு கைப்பிடி(தோல் நீக்கியது)
காய்ந்த மிளகாய்_3
உப்பு_தேவைக்கு

செய்முறை:

பூசணியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி,ஒரு கெட்டியானப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் ஒரு 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

மிளகாயை வெறும் வாணலில் போட்டு சூடாகியதும் எடுத்து ஆறியதும் வேர்க்கடலையுடன் சேர்த்துக் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

காய் அடிப் பிடிக்காமல் கிண்டிவிடவும்.காய் வேகும்போதே தண்ணீர் விட்டுக்கொள்ளும்.நன்றாக வெந்த பிறகு உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.முதலிலேயே உப்பு சேர்த்தால் காயின் அளவைப் பார்த்து நிறைய சேர்த்துவிடுவோம்.இது நீர்க்காய் என்பதால் வெந்த பிறகு அளவு குறைந்திருக்கும்.

இப்போது பொடித்து வைத்துள்ளப் பொடியைக் காயுடன் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு இறக்கவும்.

இதை சாதாரண கூட்டுபோலவே சாதத்துடன் சேர்த்து அல்லது தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

கீரைக் கூட்டு (Bok choy)

தேவையானப் பொருள்கள்:

Bok choy கீரை_2 (தண்டுடன்)
பச்சைப் பயறு (அ) கடலைப் பருப்பு_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு

அரைக்க:

சீரகம்_1/4 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து நன்றாகக் கழுவிவிட்டு ஒரு கடாயில் அது வேகும் அளவு தண்ணீ விட்டு சிறிது மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.

கீரையைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பூண்டு உரித்து நறுக்கி வைக்கவும்.காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளாயை முழுதாகப் போட்டு வெந்ததும் தூக்கிப் போட்டு விடலாம்.(காரம் விருப்பமானால் தேங்காய்,சீரகத்துடன் வைத்து அரைத்து சேர்க்கலாம்).

பருப்பு முக்கால் பதம் வேகும்பொதே வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய், கீரை சேர்த்து சிறிது உப்பு போட்டு மூடி போடாமல் வேகவிடவும்.

எல்லாம் நன்றாக  வெந்ததும் தேங்காய்,சீரகம் அரைத்து சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து கீரையில் கொட்டி மூடவும்.

இதை சாதத்தில் பிசைந்தோ (அ) சாதத்திற்கு தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.

இதனை எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.

கீரை, கூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

கோஸ் கூட்டு

தேவையானவை:

கோஸ்_1/4 கிலோ
பாசிப்பருப்பு_ அரைக் கைப்பிடி
மஞ்சள் தூள்_ஒரு துளி
உப்பு_தேவையான அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

அரைக்க:

தேங்காய்_ஒரு கீற்று
சீரகம்_1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்_2
தாளிக்க:

எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_5 இலைகள்

செய்முறை:

பாசிப்பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து,ஆறியதும் கழுவி விட்டு பருப்பு வேகுமளவு தண்ணீர் விட்டு துளி மஞ்சள் பொடி சேர்த்து மலர வேக வைக்கவும்.இதற்கிடையே கோஸைக் கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

பருப்பு நன்றாக வெந்ததும் கோஸைப் போட்டுக் கிளறி விட்டு வேக வைக்கவும்.இப்பொழுது அரைக்கக் கொடுத்துள்ள தேங்காய்,சீரகம்,பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்னீர் விட்டு அரைத்து எடுக்கவும்.கோஸ் நன்றாக வெந்த பிறகு அரைத்த கலவையை ஊற்றிக் கலக்கி விடவும்.சிறிது கொதித்ததும்  உப்பு போட்டுக் கிளறி இறக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி,கொத்துமல்லி இலை தூவி பரிமாறலாம்.இது எல்லா வகையான சாதத்திற்கும்,சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும்.

கூட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . Leave a Comment »

சுரைக்காய்,வேர்க்கடலைக் கூட்டு

தேவையானப் பொருள்கள்:

பிஞ்சு சுரைக்காய்_1
வேர்க்கடலை_2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_2
பெருங்காயம்_சிறிது

செய்முறை:

வேர்க்கடலையை வெறும் வாணலியில் வறுத்து ஆற வைக்கவும்.அதே வாணலியில் மிளகாயை எண்ணெய் விடாமல் லேசாக,கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.வேர்க்கடலை ஆறியதும் தோலுரித்து சுத்தம் செய்து,அதனுடன் வறுத்த மிளகாயைச் சேர்த்து மில்ஸியில் போட்டு கொரகொரப்பாகப்  பொடிக்கவும்.

சுரைக்காயைக் கழுவித் துடைத்துப் பொடியாக நறுக்கி ஒரு அடி கன‌மானப் பாத்திரத்தில் போட்டு ஒரு டீஸ்பூன் தண்னீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.சுரைக்காய் வேகும்போதே அதிலிருந்து தண்ணீர் வெளியேறும்.காய் வேக அதுவே போதுமானது.தண்ணீர்  குறைவாக வைப்பதால் அடி பிடிக்க வாய்ப்புண்டு.எனவே அடிக்கடி கிளறிவிடவும்.வெந்து வரும்போதே உப்பு,பெருங்காயம் சேர்த்துக் கிளறவும்.நன்றாக வெந்த பிறகு வேர்க்கடலைப் பொடியைப் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

இதை எல்லா வகையான சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.