வேர்க்கடலை சாதம் / peanut rice

 

20160426_124608_Fotor

அந்தந்த ஊர் பக்கம் விளையும் பொருட்களைக்கொண்டுதானே அவ்வூர் சமையலும் இருக்கும். அப்படித்தான் எங்கள் ஊர் பக்கம் வேர்க்கடலை அதிகமாக விளையும். அதனால் இந்த ‘மல்லாட்டை சோறு’ ரொம்பவே ஃபேமஸ். இதை எப்போதாவது ஒருமுறை செய்வ‌தால் உறவு & தெரிந்தவர் என பங்கு போகும். ஒரு பெரிய பானையில் எங்க வீட்டு chief chef(ஆயா) தான் செய்வாங்க. கெட்டியா இருக்கும். செய்த மறு நாள்தான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. ஏனோ அப்போது நான் சாப்பிட மாட்டேன். இப்போ ஆசையா இருக்கு  அவங்க செஞ்சி நாம சாப்பிடணும்போல.

என்னென்ன போட்டு செய்வாங்க என்பது அப்போதே தெரியும். ஆனால் அளவுகள் எல்லாம் தெரியாது. அவங்களுமே அரிசியை மட்டும் அளந்துகொண்டு மற்ற பொருட்களை கண்ணாலேயே அளந்துப்பாங்க‌. நல்லவேளை என் அம்மாவிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டு எப்போதாவது செய்து அவர்களை எல்லாம் நினைத்துக்கொண்டே சாப்பிடுகிறேன் 😦

இதெல்லாம் முன்பொரு காலத்தில். இப்போதோ வேலைப்பளு & ஆள்கூலி இவற்றினால் வேர்க்கடலை விளைச்சல் ஏறக்குறைய இல்லாமலே போனது. இந்த சமையலும் காணாமலே போனது.

20150918_142039

இந்த சாதத்தை பச்சரிசியில் செய்வாங்க. நான் தினையில் செஞ்சிருக்கேன். உங்க விருப்பம்போல் எல்லா தானியத்திலும் செய்ய‌லாம்.

தேவையானவை :

தினை : ஒரு கப்
புளி _ கோலி அளவு
வறுத்த வேர்க்கடலை _ 1/2 கப் (இன்னும் அதிகமாகப் போட்டாலும் நன்றாகவே இருக்கும். )
வெறும் வாணலில் வறுத்த‌ காய்ந்த மிளகாய் _ 1 (காரத்திற்கேற்ப)
உப்பு _ சுவைக்கேற்ப‌

செய்முறை :

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, ஊறியதும் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பங்கு தினைக்கு மூன்று கப்புகள் தண்ணீர் வேண்டும். இது எங்க ஊர் அடுப்புக்கு. Gas அடுப்பாக‌ இருந்தால் கூடுதலாக சேர்க்க வேண்டி வரும். புளித்தண்ணீருடன் மூன்று கப்புகள் இருக்குமாறு தேவையான தண்ணீரை சேர்த்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி(அரிசியில் செய்வதாக இருந்தால் ஒரு கப் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம்) அடுப்பில் ஏற்றவும். விருப்பமானால் இதில் துளி மஞ்சள்தூள் சேர்க்கலாம்.

தண்ணீர் நன்றாகக் கொதித்து புளி வாசனை போக இரண்டுமூன்று நிமிடங்கள் ஆகும்.

புளி வாசனை போனதும் தினையைக் கழுவி சேர்த்து, தேவைக்கு உப்பும் போட்டு, தீயைக் குறைத்து, மூடி வேக வைக்கவும்.

தினை சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் அடி பிடிக்க சான்ஸ் உண்டு. எனவே அடிக்கடி கிண்டி விடவும்.

சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே வறுத்த வேர்க்கடலை & வறுத்த காய்ந்தமிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும்பாதியுமாக பொடித்துக்கொள்ளவும்.

பொடி மைய இருப்பதைவிட …… அங்கங்கே வேர்க்கடலை கடிபட்டால் நன்றாக இருக்கும்.

சாதம் நன்றாக வெந்து கெட்டியான‌தும் பொடித்த பொடியைப் போட்டு நன்றாகக் கிண்டி,  உப்பு & காரம் சரிபார்த்து, அடுப்பை நிறுத்திவிட்டு மூடி வைத்தால் அப்படியே புழுங்கிவிடும்.

பிறகு எடுத்து சாப்பிட வேண்டியதுதான். எண்ணெய், தாளிப்பு இது எதுவும் இல்லாத சுவையான உணவு !

20160426_124605_Fotor

இதற்கு அவர்கள் ஏதும் தொட்டு சாப்பிட்டதாக நினைவில்லை. நான் வத்தல் அல்லது அப்பளத்துடன் சாப்பிடுவேன்.

ஒருசிலர் பொடி சேர்க்கும்போது கொஞ்சம் முருங்கைக் கீரையும் சேர்ப்பாங்க. ஆனால் அதை அன்றே காலி பண்ணிடுவாங்க. கீரை சேர்ப்பதால் ஊசிப்போயிடுமே, அதனால்தான்.

தண்ணீரின் அளவில் குழப்பம் என்றால் பின்னூட்டத்தில் கேட்போமே !

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 4 Comments »

கத்தரிக்காய் சாதம் / Brinjal Rice

20150226_145919

சுவையான கத்தரிக்காய் சாதம் !

கீழே உள்ளவை எல்லாம் எங்க ஊர் சந்தையில் சென்றமுறை வாங்கிய கத்தரிக்காய், நல்லாருக்கா பாருங்க !! இன்னும் கொஞ்ச நாளில் இதுபோன்ற விதவிதமான கத்தரிக்காய்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துவிடும். பிறகு எஞ்ஜாய்தான் !

20141108_130729

IMG_1307

IMG_8542

தேவையானவை :

அரிசி _ ஒன்றரை கப்

கத்தரிக்காய் _ நான்கைந்து

உப்பு _ தேவைக்கு
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
எலுமிச்சை _ சிறு துண்டு

வறுத்து பொடிக்க‌ : காய்ந்த மிளகய், மிளகு, கொத்துமல்லி விதை, எள்,  கசகசா,  தேங்காய்

20150226_144730

எல்லாமும் தோராயமாகக் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பம்போல் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளவும்.

கொத்துமல்லி தூள் கைவசம் இருந்ததால் தூளாகவே எடுத்துக் கொண்டேன். ஆனாலும் ஃப்ரெஷ் கொத்துமல்லியை வறுத்துப் பொடித்து செய்தால் வாசனை இன்னும் சூப்பரா இருக்கும்.

தாளிக்க :

நல்லெண்ணெய்
முந்திரி
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாதம் குழையாமல், நன்றாக வெந்து, உதிரிஉதிரியாக இருக்குமாறு வடித்து ஆறவிடவும். நான் புழுங்கல் அரிசியில் செய்தேன்.

தற்போதைக்கு சின்ன கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் பெரிய கத்தரிக்காயின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன்.

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றில் தேங்காய் தவிர மற்றதை வெறும் வாணலில் சூடு வர வறுத்துத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாக தேங்காயைத் துருவி ஈரம்போக வறுத்து, இவை எல்லாம் ஆறியதும் ஒன்றாக சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு, இதில் பொடித்து வைத்துள்ள பொடியைப்போட்டு கிண்டி, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கொத்துமல்லியைத் தூவிவிட்டு, இறுதியில் சாதத்தைக் கொட்டி கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, இளந்தீயில் சிறிது நேரம் மூடிவைத்து, சாதம் சூடு ஏறி மசாலாவுடன் நன்றாகக் கலந்ததும் இறக்கி சாப்பிட்டுப் பார்த்து ……

20150226_120647

……….. எப்படி வந்தச்சுன்னு வந்து சொல்லுங்களேன் !!

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

கருப்பட்டி பொங்கல் & பால் பொங்கல்

 

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!

IMG_3678

 

மகளின் ‘ஜேப்பனீஸ் குக்கிங்’கிற்காக ‘தாய் ஸ்டிக்கி ரைஸ்’ வாங்க ஆரம்பித்து, பிறகு அடிக்கடி வாங்கிவிடும்படி ஆகிவிட்டது. ஸ்டிக்கியாக இருக்கும் இது நல்ல வாசனையுடன் சுவையும் அலாதியாக இருக்கும். வெறும் சாதத்தையே இரண்டு பேரும் போட்டிபோட்டு சாப்பிட்டுவிடுவோம்.

இந்த அரிசியை வைத்து எளிய முறையில் ஒரு இனிப்புப் பொங்கல் செய்வோம். விருப்பமானால் நெய்யில் முந்திரி வறுத்து சேர்த்துக்கொள்ளுங்கள். ஏலக்காய் சேர்ப்பதானாலும் இற‌க்கும்போது பொடியாக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.

என்னைக்கேட்டால் பனை வெல்லம் & தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் இது எதுவுமே தேவையில்லை என்பேன். நம் வீட்டில் உள்ள சாதாரண பச்சரிசியிலும் செய்யலாம்.

எங்க வீட்டில் பெரும் பொங்கலுக்கு சர்க்கரைப் பொங்கலும், பால் பொங்கலும் செய்வாங்க. முதலில் சர்க்கரைப் பொங்கலைப் பார்ப்போம்.

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
பனைவெல்லம் _ 3/4 கப்
தேங்காய் பால் _ 3/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌

செய்முறை:

அரிசியைக் கழுவிவிட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு ஊறிய அரிசியை தண்ணீருடனே குக்கரிலோ அல்லது ஒரு பாத்திரத்திலோ வைத்து குழையாமல் fluffy  யாக‌ வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பனைவெல்லத்தைப் பொடித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் கரைந்து வந்ததும் மண் & தூசு இல்லாமல் வடிகட்டி அதை ஒரு வாணலில் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி விடாமல் கிண்டவும்.

எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் இறக்கவும். இதை அலங்கரிப்பது உங்கள் விருப்பம்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பால் பொங்கல்

தேவையானவை:

பச்சரிசி _ ஒரு கப்
பால் _ 1/4 கப்
வெல்லம்_சிறு துண்டு

செய்முறை:

ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீருமாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும். அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.

பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும். அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிண்டிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிண்டிவிட்டு வெந்ததும் இறக்கவும்.

சாமிக்குப் படைக்கும்போது சாதத்தின்மேல் சிறு துண்டு வெல்லம் வைத்து படைப்பாங்க‌. வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.

இனிப்பு வகைகள், சாதம், பொங்கல் வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

புலாவ்

என்னடா இது! சமைக்கும்போது இவ்வளவு ஆவி வருதேன்னு பார்த்தால்………Halloween pulav ஆம் !

IMG_1181

**********************************************************************************************************************

Halloween special ஆக மூன்று புலாவ்ஸ், விருப்பம் எதுவோ அதை செலக்ட் பண்ணிக்கோங்க!

1. காய்கறி புலாவ்

IMG_1226

2. பருப்புகீரை புலாவ்

pulaav

3. வெந்தயக்கீரை புலாவ்

IMG_1811

*******************************************************************************************************************

இங்கு காய்கறியில் செய்த புலாவ் ரெஸிபி கொடுத்துள்ளேன்.  இந்த புலாவ் சூப்பர் சுவையில் இருக்கும் என்பதால் நம் விருப்பத்திற்கேற்ப‌ காய்கறிகள், கீரைகள் என‌ மாற்றி இதே செய்முறையில் செய்து பார்ப்போமே!

தேவையானவை:

பாசுமதி அரிசி _ ஒரு கப்

காய்கறிகள் _ கொஞ்சம்
(மினி உருளை ஒன்று,ரொமானோ பீன்ஸ் இரண்டு,பச்சை பட்டாணி கொஞ்சம்,கேரட் சிறு துண்டு,ப்ரோக்கலி சிறியது ஒன்று)

சின்ன வெங்காயம்_ 4
தக்காளி _சிறியதாக ஒன்று
பச்சை மிளகாய்_1
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
பொடித்த‌ மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன் (செய்முறை கீழேயுள்ளது.இல்லையென்றால் மிளாய்த்தூளை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.)
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_2
தேங்காய்ப்பால்_ கொஞ்சம்(விருப்பமானால்)
புதினா & கொத்துமல்லி
எலுமிச்சை சாறு
உப்பு_தேவைக்கு

(பொடித்த‌ மிளகாய்த்தூள்____இந்த அளவுகள் என்றில்லை,நானாக இவற்றில் கொஞ்சம்கொஞ்சமாக எடுத்து, அவை: கிராம்பு, பட்டை,பிரிஞ்சி இலை,காய்ந்த மிளகாய்,கொத்துமல்லி விதை,துவரம் பருப்பு,சீரகம், பெருஞ்சீரகம் இவற்றை வெறும் வாணலில் வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு சிக்கன்,குருமா குழம்பு போன்றவற்றில் சேர்ப்பேன். ஒருநாள் மீதமான இந்த தூளை புலாவில் சேர்த்தேன்.நன்றாக இருந்தது. அதிலிருந்து இதையும் சேர்த்துக்கொள்வேன்)

தாளிக்க:

நெய் அல்லது ஆலிவ் எண்ணெய்
கிராம்பு
பட்டை
பிரிஞ்சி இலை
சீரகம்
முந்திரி

செய்முறை:

பட்டாணியை முதல் நாளிரவே ஊறவைக்கவும்.

அரிசியைக் கழுவிவிட்டு ஒரு 10 நிமி தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிவிட்டு வாணலில் சிறிது நெய் விட்டு சூடு வர வதக்கவும். இவ்வாறு செய்வதால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியே இருக்கும்.

வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்,காய்கறிகள் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு,இஞ்சி&பூண்டு தட்டிக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி நெய் அல்லது எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துக்கொண்டு தட்டி வைத்துள்ள இஞ்சி&பூண்டு சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

வெங்காயம் வதங்கியதும் தக்காளியையும் ,அடுத்து ஊறிய பட்டாணி, காய்கறிகளையும் சேர்த்து வதக்கி ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் ஊற்றி(தேங்காய்ப்பால் சேர்ப்பதாக இருந்தால் அதையும் கணக்கில் கொள்ளவும்), மிளகாய்த்தூள் & ஸ்பெஷல் மிளகாய்த்தூள்,உப்பு போட்டு மூடி வேகவைக்கவும்.

தேவையான தண்ணீர் இருந்தால்தான் அரிசி உடையாமல் வேகும். இல்லையென்றால் சாதம் வேகாமல் நொய்யில் செய்தது போல் உடைந்துபோய் இருக்கும்.

தண்ணீர் கொதி வந்ததும் அரிசியைப்போட்டு கிண்டிவிட்டு உப்பு&காரம் சரிபார்த்து,தேவையானால் சேர்த்துக்கொண்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.

pulaav

அரிசியுடன் சேர்ந்து தண்ணீர் கொதிக்கும்போது நனைத்துப் பிழிந்த ஒரு ஈரத்துணி அல்லது பேப்பர் டவல் அல்லது அலுமினம் ஃபாயிலால் படத்திலுள்ளதுபோல்,

pulaav

பாத்திரத்தின் வாய்ப்பகுதியை மூடி மேலே குக்கர் கிண்ணம் அல்லது தட்டில் தண்ணீர் ஊற்றி பாத்திரத்தின் மேலே வைத்து தீயை மிகவும் குறைத்து ஒரு 10 நிமி வைக்கவும்.

இடையில் 5 நிமி கழித்து திறந்து எலுமிச்சை சாறு,புதினா&கொத்துமல்லி போட்டு லேஸாகக் கிண்டிவிட்டு மீண்டும் பழையபடியே மூடிவிடவும்.

அடுத்த ஐந்தாவது நிமி கமகம காய்கறி புலாவ் தயார்.

IMG_1226

வெங்காய தயிர் பச்சடியுடன் சாப்பிட சூப்பர்.எனக்கு புலாவ்,பிரியாணி எல்லாமே தனியாக சாப்பிடத்தான் பிடிக்கும்.நீங்க எப்படி?

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

பொரியல் சாதம்

இதனை பிரட்டிய சாதம், வாணல் சாதம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.

எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணல் நிறைய பொரியல் செய்வாங்க. எல்லோரும் சாப்பிட்டு முடித்தபிறகு, வாணலில் ஒன்றிரண்டு டீஸ்பூன் அளவிற்கு பொரியல் கொஞ்சம் மீதமிருக்கும். தாளிப்புப் பொருள்களும் கொஞ்சம்போல ஒட்டியிருக்கும். அதில் ஒரு கை சாதம் போட்டு பிரட்டி எடுத்து சாப்பிட்டால் அது சூப்பர் சுவையில் இருக்கும். இதை சாப்பிட்டுப் பழகியவர்கள் விடமாட்டார்கள். வெஜ், நான்வெஜ் எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

சில சமயங்களில் பிடித்தமான பொரியலாக இருந்தால், வாணலில் உள்ளதை அப்படியே ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு, கொஞ்சம் அதிகமாகவே சாதத்தைப் போட்டு ஆளுக்கொரு கையாகக் கொடுப்பான் என் தம்பி. அதை அடித்துப்பிடித்து சாப்பிடுவோம்.

எண்ணெய் வேண்டாம் என்பதால் இப்போது இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டாலும், என்றைக்காவது இது மாதிரி செய்து சாப்பிடுவேன். அப்படி எடுத்த படங்கள்தான் கீழேயுள்ளவை. பழக்கம் இல்லையென்றாலும், ஒருதடவை செய்து பாருங்க, அப்புறம் நீங்களும் விடமாட்டீங்க!

நான்வெஜ் வகைகளில் நண்டு வறுவல், நெத்திலிக் கருவாடு வறுவல், சிக்கன் வறுவல்இவற்றில் பிசைந்த சாதம் சூப்பராக இருக்கும்.

உருளைக்கிழங்கு பொரியல் சாதம்

potato sadham

பீன்ஸ் பொரியல் சாதம்

beans sadham

 

 

 

 

 

 

 

 

 

வெண்டைக்காய் பொரியல் சாதம்

vendai sadham

 

 

 

 

 

 

 

 

 

ரொமானோ பீன்ஸ் பொரியல்   சாதம்

rice

ப்ரோக்கலி ரே(ய்)ப் பொரியல் சாதம்

saadham

பாவக்காய் பொரியல் சாதம்

rice

கொத்தவரங்காய்ப் பொரியல் சாதம்

sadham

கத்தரிக்காய் பொரியல்  சாதம்

saadham

முருங்கைக்கீரை பொரியல்  சாதம்

saadham

முருங்கைக்கீரை பொரியலின் செய்முறை இன்னும் பதிவாகவில்லை, விரைவில் போடுகிறேன்.

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 7 Comments »

கருப்பரிசி சாதம் / Karupparisi saadham

balck ricerice

கருப்பரிசி வாங்கியாச்சு, சமைக்க வேண்டும், எப்படி சமைப்பது, இப்படி எதுவுமே தெரியாததால் நெட்டில் தேடிப்பார்க்கலாம் என்று தேடினால் இந்த அரிசி எளிதில் வேகாது, முதல் நாளிரவே ஊற வைத்தால்தான் அடுத்த நாள் வேக வைக்க முடியும் என்றெல்லாம் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் பயந்துதான் போனேன்.

ஏன்தான் வாங்கினோமோ என்றாகிவிட்டது. அங்கேயும்,இங்கேயுமாக சென்று படித்த பிறகுதான் தெரிந்தது அதில் அடங்கியுள்ள சத்துகளின் விவரம்.

சரியென ஒரு முடிவுக்கு வந்து முதல் நாள் சமைக்கும்போது காலையில் ஊறவைத்து மதியத்துக்கு சாதாரண அரிசி மாதிரியே வடித்துப் பார்த்தேன்.

அடுத்த நாள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வேக வைத்து வடித்தேன்.

சாதாரண அரிசி மாதிரிதான் வேகிறது. வேக எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சாதாரண அரிசிக்கும் இதற்கும் எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை.

அதனால் இப்போதெல்லாம் ஊற வைப்பதெல்லாம் இல்லாமல் சாதாரண அரிசி மாதிரியேதான் செய்கிறேன்.

பிரஷர் குக்கரில் வைப்பதானால் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு ஆவி வரும்போது வெயிட் போட்டு தீயைக் குறைத்துவைத்து விசில் வராமல் ஒரு 10 லிருந்து 15 நிமிடத்திற்குள் நிறுத்திவிடுவேன்.

நீங்களும், சாதாரண அரிசியை எப்படி குக்கரில் வேக வைப்பீங்களோ அப்படியே வேகவைங்க.

இன்னும் எலக்ட்ரிக் குக்கரில் வேக வைக்கவில்லை.

கொஞ்சம் ஸ்டிக்கி ரைஸ் மாதிரி இருக்கிறது.சாதாரண அரிசி மாதிரியே சமைக்கலாம். சுவையில் ஒன்றும் குறையில்லை. அதனால தைரியமா வாங்குங்கோஓஓ!!  யான் பெற்ற இன்பம் பெறுக…………இவ் வலையுலகம்!!

ricerice

சாம்பார், கிள்ளிப்போட்ட அல்லது முழுமிளகாய் சாம்பார், ரஸம் இவற்றுடன் சூப்பரா இருக்கு.

அடுத்த பதிவில் இந்த சாதத்தை வைத்து வேறு ஏதாவது செய்துகொண்டு வருகிறேன், அதற்குள் கடைகளுக்கு விஜயம் செய்து கருப்பரிசியை வாங்கிவந்து சாதமாக்கி வைங்க!

கருப்பரிசி, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 16 Comments »

தேங்காய் சாதம்

 

தேங்காய் சாதத்திற்கு தேர்ந்தெடுக்கும் தேங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.கொஞ்சம் இனிப்பான,சதைப்பற்றுள்ளத் தேங்காயானால் சுவை அதிகமாக இருக்கும்.

முந்திரி,வேர்க்கடலை இவற்றைப் போட வேண்டுமென்பதில்லை. விருப்பமானால்,வீட்டில் இருந்தால் போடலாம்.

சாதத்தை அடுப்பிலிருந்து இறக்கும்போது அப்பளத்தைப் பொரித்து,நொருக்கிப் போட்டும் இறக்கலாம்.

தேவையானவை:

அரிசி_ஒரு கப்
தேங்காய்ப்பூ_ஒரு கப்
இஞ்சி_சிறுதுண்டு
பச்சைமிளகாய்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
முந்திரிபருப்பு
பெருங்காயம்
காய்ந்தமிளகாய்
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து  வேக வைத்து உதிர் உதிராக வரும் பக்குவத்தில் வடித்து,பிறகு ஆறவைக்கவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, இஞ்சி, பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கவும்.

அடுத்து தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக வதக்கவும்.இது வதங்கும்போதே சிறிது உப்பை ஸ்ப்ரே பன்னவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்து வடித்திருக்கிறோம்.

தேங்காய்ப்பூ நன்றாக வதங்கி சிவந்து வரும்போது ஆறிய சாதத்தைக்கொட்டிக் கிளறவும்.சாதம் சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

மிக எளிதாக செய்யக்கூடிய தேங்காய் சாதம் தயார்.

இதற்கு அப்பளம்,வத்தல்,பருப்புத் துவையல்,வறுவல்,பொரியல் எல்லாமே நன்றாக இருக்கும்.

நிறைய சாத வகைகள் செய்யும்போது இதையும் செய்தால் கலர்கலரான சாதங்களுக்கு மத்தியில் பளீர் வெண்மையுடன் கலக்கலாக இருக்கும்.இதனை மீதமான சாதத்திலும் செய்யலாம்.

 

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , . 6 Comments »

தயிர்சாதம்-2

 

தயிர் சாதம் செய்யும்போது தயிர் மட்டும் சேர்த்தோ அல்லது பால்&தயிர் சேர்த்தோ செய்வோம்.போதுமான தயிர் இல்லாத சமயத்தில் இந்த செய்முறை கைகொடுக்கும்.இதில் என்ன விசேஷமென்றால் தயிர் குறைவாக சேர்த்தாலும் மிக அதிகமாக சேர்த்ததுபோலவே இருக்கும்.சுவையும் சூப்பராக இருக்கும்.ஒரு தடவை இந்த முறையில் செய்தால் அடுத்தடுத்து இப்படியேதான் செய்வீங்க.

செய்முறைக்கான லிஸ்ட்தான் நீளமாக இருக்கிறதே தவிர செய்வது மிக எளிது. அலங்கரிக்க பகுதியை உங்கள் விருப்பம்போல் மாற்றிக்கொள்ளலாம்.

தேவையானவை:

பச்சரிசி_ஒரு கப்
தயிர்_ 3 டேபிள் ஸ்பூன்
சாதம் வடித்த கஞ்சித்தண்ணீர்_சாதத்தில் 1/4 பங்கு
உப்பு_தேவைக்கு

அலங்கரிக்க:

இஞ்சி
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
கேரட்
திராட்சை
மாதுளை முத்துக்கள்
வெள்ளரிப் பிஞ்சு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை

செய்முறை:

அரிசியை சாதாரணமாக வேக வைத்து வடிக்கவும்.குழைய வேண்டுமென்பதில்லை.நீர் வடிந்ததும் சூடான சாதத்தில் அதன் அளவில் 1/4 பங்கிற்கு இப்போது வடித்த சூடான கஞ்சித்தண்ணியை ஊற்றி ஒரு ஸ்பூனால் நன்றாகக் கலக்கவும்.சாதம் உடைந்து,நொறுங்கி தண்ணீருடன் சேர்ந்துவிடும்.

பிறகு தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.சாதம் நன்றாக ஆறிய பிறகு தயிர்,உப்பு சேர்த்துக் கிண்ட வேண்டும்.தயிர் கொஞ்சமே சேர்த்தாலும் நிறைய சேர்த்ததுபோல் இருக்கும்.

அதன் பிறகு இஞ்சி,பச்சை மிளகாய்,கொத்துமல்லி இலை,கேரட், திராட்சை,மாதுளை முத்துக்கள்,வெள்ளரிப் பிஞ்சு இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்துவிடலாம்.

இப்போது சுவையான வெயிலுக்கேற்ற தயிர் சாதம் ரெடி.இதிலேயே காரம்,காய்,பழமென எல்லாம் இருப்பதால் தொட்டு சாப்பிட எதுவுமே தேவையில்லை.அப்படியே சாப்பிடலாம்.

கிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 15 Comments »

பிஸிபேளாபாத்

தேவையானவை:

அரிசி_ஒரு கப்
துவரம் பருப்பு_1/2 கப்
விருப்பமான காய்கறிகள்_2 கப் (நறுக்கியது)
(ப.பட்டாணி,பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு,முருங்கைக்காய்,கத்தரிக்காய்)
சின்ன வெங்காயம் _10
தக்காளி_1
புளி_கோலி அளவு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

பிஸிபேலாபாத் பொடி தயாரிக்க:

கொத்துமல்லி விதை_2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2
கடலைப் பருப்பு_ஒரு டீஸ்பூன்
வெந்தயம்_சிறிது
கஸகஸா_ஒரு டீஸ்பூன்
கிராம்பு_1
பட்டை_1
லவங்கம்_1
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
கறிவேப்பிலை

காரம்,மசாலா வாசனை அதிகம் வேண்டுமானால் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.

செய்முறை:

வெறும் வாணலியில் துவரம் பருப்பைப் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளவும்.துவரம் பருப்பை வறுத்து செய்யும்போது நல்ல வாசனையாக இருக்கும்.

அரிசியில் புழுங்கலரிசியை எடுத்துக்கொள்வது நல்லது.நின்று வேகும்.

ஒரு குக்கரில் அரிசி,பருப்பு இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் கழுவிவிட்டு எப்போதும் சாதத்திற்கு  வைக்கும் தண்ணீரை விட கொஞ்சம் கூடுதலாக விட்டு,சிறிது மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும். பருப்பிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

சாதம் வெந்துகொண்டிருக்கும்போதே பொடியைத் தயார் செய்துகொள்ளலாம்.

வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்க வேண்டியவற்றைத் தனித்தனியாக வறுத்து,ஆறியதும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

புளியை கரைத்து வைத்துக்கொள்ளவும்.

காய்கறிகளை விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,தக்காளி,காய்கறிகள் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் புளித்தண்ணீர்,சிறிது உப்பு சேர்த்து,காய்கள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி காய் வெந்து வரும்வரை மூடி கொதிக்கவைக்கவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்திருப்பதால்  கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளவும்.

காய் வெந்ததும் பொடித்து வைத்துள்ளப் பொடியைப்போட்டுக் கலந்துவிட்டு ஒரு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.

இப்போது காய்கறி கலவையை எடுத்து வெந்த பருப்புசாதத்தில் கொட்டிக் கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

இதற்கு உருளைக்கிழங்கு,மசால் வடை,அப்பளம்,வத்தல் என எல்லாமே நன்றாக இருக்கும்.

குறிப்பு:

பொடி செய்ய முடியவில்லையெனில் சாம்பாருக்குப்போடும் மிளகாய்த்தூளையேப் பயன்படுத்திக் கொள்ளலாம் . தாளிக்கும்போது மட்டும் கிராம்பு,பட்டை,லவங்கம் சேர்த்து  தாளித்துக்கொள்ளலாம்.

தாளித்த புளிசாதம்

தேவையானப் பொருள்கள்:

சாதம்_ஒரு கிண்ணம்
புளி_கோலி அளவு
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
கடலைப்பருப்பு
வேர்க்கடலை_கொஞ்சம் (இல்லையெனில் பரவாயில்லை)
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

வதக்க வேண்டிய பொடிகள்:

கொத்துமல்லி பொடி_ஒரு டீஸ்பூன்
வெந்தயப்பொடி_சிறிது

செய்முறை:

இதனைப் பெரும்பாலும் இரவு மீதமாகும் சாதத்தில்தான் செய்வார்கள்.சாதம் ஒரு கிண்ணம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

புளியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

ஊறியதும் கெட்டியாகக் கரைத்துக்கொள்ளவும்.

சாதத்தில் புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். இரவு முழுவதும் இருக்கட்டும்.அப்போதுதான் புளி,சாதத்தில் நன்றாக ஊறி இருக்கும்.காலையில் பார்த்தால் சாதம் நீர்விட்டிருக்கக் கூடாது.கெட்டியாக இருக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,தீயை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு கொத்துமல்லிப் பொடி,வெந்தயப் பொடியை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு உடனடியாக சாதத்தை சேர்த்துக் கிளறவும்.

இப்போது தீயை மிதமாக்கிக்கொண்டு ஒரு மூடி போட்டு வைக்கவும்.

இடையிடையே கிளறி விடவும்.

சாதம் நன்றாக சூடு ஏறி புளி வாசனை போனதும் இறக்கவும்.

இதற்கு உருளைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு,முட்டை,சிக்கன் வறுவல்கள் நன்றாக இருக்கும்.

நல்ல பதமாக செய்தால் குழம்பு வைத்து கிண்டும் சாதத்தைவிட இதுதான் அருமையாக இருக்கும்.