தேவையானப் பொருள்கள்:
ரவை_1 கப்
தேங்காய்ப் பூ_2 கப்
சர்க்கரை_2 கப்
முந்திரி_10
நெய்_1/4 கப்
ஏலக்காய்_1
தண்ணீர்_2 கப்
செய்முறை:
ரவை,தேங்காய்ப் பூ இவற்றை தனித்தனியாக ஒவ்வொரு ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்துக்கொள்ளவும்.மேலும் சிறிது நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக்கொள்ளவும்.ஏலக்காயைப் பொடிதுக்கொள்ளவும்.
ஒரு கெட்டியான பாத்திரத்தில் தண்ணீர்,சர்க்கரை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றி பாகு காய்ச்சவும்.நல்ல கம்பிப்பதம் வர வேண்டும்.(ஒரு கரண்டியில் சிறிது பாகை எடுத்து இரண்டு விரல்களில் தொட்டு உருட்டி விரல்களைப் பிரித்தால் விரல்களுக்கிடையே கம்பி போன்று வர வேண்டும்.இதுதான் கம்பிப் பதம்.)
இப்போது ரவையை சிறிது சிறிதாக பாகில் கொட்டிக் கட்டி இல்லாமல் கிளற வேன்டும்.அடுத்து தேங்காய்ப் பூவை அதேபோல் கொட்டிக்கிளறவும்.தீ மிதமாக இருக்கட்டும்.ஏலப் பொடியைத் தூவி இடையிடையே நெய் ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.கொஞ்ச நேரம் கழித்து கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.அதுதான் சரியான பர்பி பதம்.அப்போது கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி பரப்பி விடவும்.வறுத்த முந்திரியைத் தூவி அலங்கரித்து ஆற வைக்கவும்.கொஞ்சம் ஆறியதும் ஒரு கத்தியால் சதுரமாகவோ(அ)டைமன்ட் வடிவத்திலோ துண்டுகள் போடவும்.நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில்(அ)பிளாஸ்டிக் கவரில் எடுத்து வைக்கவும்.
இப்போது மிகவும் சுவையான,இனிப்பான,சாஃப்டான தேங்காய்,ரவை பர்பி தயார்.