தேவையானவை:
உருளைக்கிழங்கு_1
காலிஃப்ளவர்_1(சிறியது)
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
கொத்துமல்லி இலை_கொஞ்சம்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
காலிஃப்ளவரை சிறுசிறு பூக்களாகப் பிரித்து ஒரு 2 நிமிடங்களுக்கு உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.
பூண்டிதழ்களை நறுக்கிக்கொள்ளவும்.அல்லது ஒரு தட்டுதட்டி சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு கடாயை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டுச் சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் பூண்டு சேர்த்து வதக்கி,அடுத்து உருளைத் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சிறிது உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து (அ) சிறிது தண்ணீர் தெளித்துவிட்டு (அ) சிறிது கூடுதலாக எண்ணெய் சேர்த்துக் கிளறி மிதமானத் தீயில் மூடி வேக விடவும்.
உருளை வெந்ததும் தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காலிஃப்ளவரைப் போட்டு வதக்கி சிறிது மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,சிறிது உப்பு இவற்றைத் தூவினாற்போல் போட்டு மூடி வேகவிடவும்.
இது சீக்கிரமே வெந்துவிடும்.வெந்ததும் இதனுடன் உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு 5 நிமி மிதமானத் தீயில் மூடி வைக்கவும்.
இரண்டும் ஒன்றாக கலந்து வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.