தேவையானவை:
வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
காலிஃப்ளவர்_ஒரு சிறு பகுதி
சின்ன வெங்காயம்_ஐந்தாறு
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_சிறிது
தாளிக்க:
எண்ணெய்,கிராம்பு_3,பிரிஞ்சிஇலை_1,சீரகம்,கடலைப்பருப்பு,முந்திரி,பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி,கேரட்,காலிஃப்ளவர் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வெங்காயம்,தக்காளி,காய்கள்,பட்டாணி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கிவிட்டு,ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேஸாகத் தூவியவாறு கொட்டிக்கொண்ட்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் நன்றாக வரும்.
முழுவதையும் கொட்டிக்கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறிக்கொடுத்து,எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.தேங்காய் சட்னி,சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
உங்கள் விருப்பம்போல் காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.அதேபோல் இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.
இப்பதிவை ஃபாயிஷாவின் Passion on plate giveaway event ற்கு அனுப்புகிறேன்.