தேவையானப் பொருள்கள்:
Bok choy கீரை_2 (தண்டுடன்)
பச்சைப் பயறு (அ) கடலைப் பருப்பு_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_2
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_1
உப்பு_தேவைக்கு
அரைக்க:
சீரகம்_1/4 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_1/2 டீஸ்பூன்
தாளிக்க:
நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைப் பருப்பை சிவக்க வறுத்து நன்றாகக் கழுவிவிட்டு ஒரு கடாயில் அது வேகும் அளவு தண்ணீ விட்டு சிறிது மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும்.
கீரையைக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பூண்டு உரித்து நறுக்கி வைக்கவும்.காரம் வேண்டாம் என்பவர்கள் பச்சை மிளாயை முழுதாகப் போட்டு வெந்ததும் தூக்கிப் போட்டு விடலாம்.(காரம் விருப்பமானால் தேங்காய்,சீரகத்துடன் வைத்து அரைத்து சேர்க்கலாம்).
பருப்பு முக்கால் பதம் வேகும்பொதே வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய், கீரை சேர்த்து சிறிது உப்பு போட்டு மூடி போடாமல் வேகவிடவும்.
எல்லாம் நன்றாக வெந்ததும் தேங்காய்,சீரகம் அரைத்து சேர்த்துக் கிளறிவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து கீரையில் கொட்டி மூடவும்.
இதை சாதத்தில் பிசைந்தோ (அ) சாதத்திற்கு தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம்.
இதனை எல்லாக் கீரைகளிலும் செய்யலாம்.