தேவையானப் பொருள்கள்:
பெரும்பயறு_மூன்று கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)
சின்ன வெங்காயம்_2
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
பெரும்பயறை ஊற வைக்க வேண்டுமென்பதில்லை.அப்படியேகூட வேக வைக்கலாம்.தேவையானப் பயறை ஒரு குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கவும்.
அல்லது ஊற வைத்து செய்வதாக இருந்தால்,நன்றாக ஊறியதும் குக்கரில் வைக்காமல் ஒரு பாத்திரத்தில் பயறு மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கலாம்.சீக்கிரமே வெந்துவிடும்.
நன்றாக வெந்ததும் (குழைய விட வேண்டாம்) தண்ணீரை வடித்துவிடவும்.
ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.
தாளிப்பு முடிந்ததும் கொத்துமல்லி இலை,சின்ன வெங்காயம் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கலந்து சாப்பிட வேண்டியதுதான்.
இப்போது பெரும்பயறு சுண்டல் தயார்.