பெரும்பயறு சுண்டல் (Black eye beans)

தேவையானப் பொருள்கள்:

பெரும்பயறு_மூன்று கையளவு (ஒரு நபருக்கு ஒரு கை)
சின்ன வெங்காயம்_2
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பெரும்பயறை ஊற வைக்க வேண்டுமென்பதில்லை.அப்படியேகூட வேக வைக்கலாம்.தேவையானப் பயறை ஒரு குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கவும்.

அல்லது ஊற வைத்து செய்வதாக இருந்தால்,நன்றாக ஊறியதும் குக்கரில் வைக்காமல் ஒரு பாத்திரத்தில் பயறு மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கலாம்.சீக்கிரமே வெந்துவிடும்.

நன்றாக வெந்ததும் (குழைய விட‌ வேண்டாம்) தண்ணீரை வடித்துவிடவும்.

ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.

தாளிப்பு முடிந்ததும் கொத்துமல்லி இலை,சின்ன வெங்காயம் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கலந்து சாப்பிட வேண்டியதுதான்.

இப்போது பெரும்பயறு சுண்டல் தயார்.

பட்டாணி சுண்டல்

தேவையானப் பொருள்கள்:

பட்டாணி_1 கப் ( Yellow peas  )
உப்பு_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_2
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி நீரை வடித்துவிட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.லேசாக வதக்கினால் போதும்.அடுத்து சுண்டலைக் கொட்டி சூடேறும் வரைக் கிளறிவிட்டு,தேங்காய்ப் பூ,கொத்துமல்லி தூவி இறக்கவும்.மாங்காயைக் கூட சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிப் போடலாம். (இதில் தேங்காய்,மாங்காய் இரண்டுமே இல்லாததால் போடவில்லை).

கொண்டைக்கடலை சுண்டல்

 

தேவை:

கொண்டைக்கடலை_1 கப்
உப்பு_தேவையான அளவு
சின்ன வெங்காயம்_1

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விடவேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.பிறகு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சுண்டலில் கலந்து சாப்பிட சுவை கூடும்.

மொச்சை சுண்டல்

 

தேவை:

மொச்சை_1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்_1/2 டீஸ்பூன்
கடுகு
உளுந்து
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மொச்சையை முதல் நாளே ஊற வைத்துவிட வேண்டும்.ஊறிய பிறகு நன்றாகக் கழுவி உப்பு போட்டு வேக வைக்கவும்.நன்றாக வெந்த பிறகு நீரை வடித்து விட வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.இதை மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ் ஆகக் கொடுக்கலாம்.

சிற்றுண்டி வகைகள், சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »

வேர்க்கடலை சுண்டல்

 

தேவை:

வேர்க்கடலை_1 கப்
உப்பு_தேவையான அளவு

தாளிக்க:

கடுகு_கொஞ்சம்
உளுந்து_கொஞ்சம்
சீரகம்_கொஞ்சம்
காய்ந்த மிளகாய்_1
பெருங்காயம்_சிறிது
சின்ன வெங்காயம்_1
கறிவேப்பிலை_5 இலைகள்
தேங்காய்ப்பூ_1 டீஸ்பூன்
எண்ணெய்_1/2 டீஸ்பூன்

செய்முறை:

வேர்க் கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும்.அடுத்த நாள் அதை நன்றாக கழுவி  விட்டு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.நன்கு வெந்ததும் நீரை வடித்து விடவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,சீரகம்,காய்ந்த மிளகாய்,பெருங்காயம்,கறிவேப்பிலை இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து கடைசியில் சின்ன வெங்காயம் சேர்த்து உடனே சுண்டலில் கொட்டிக் கிளறவும். பரிமாறும்போது தேங்காய்ப் பூ சேர்க்கலாம்.

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . Leave a Comment »