ப்ரோக்கலி ஈஸி பொரியல்

 

தேவையானவை:

ப்ரோக்கலி _ ஒரு முழு பூ

பொடித்த மிளகு _ காரத்திற்கேற்ப

பூண்டு _ தேவைக்கேற்ப

எண்ணெய்

உப்பு

இனி எப்படி செய்தால் சுவையாக இருக்கும் என பார்க்கலாம்.

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும். பூண்டிதழ்களை ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பூக்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு போட்டு ப்ரோக்கலி பூக்களையும் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டிவிடவும். நீண்ட நேரம் கொதிக்கவிட வேண்டாம். அதிகமாக வெந்துவிட்டால் அது வதங்கியதுபோல் வலவலவென ஆகிவிடும்.

வெந்த பூவை வேண்டிய அளவில் கையால் அல்லது கத்தியால் சிறுசிறு இதழ்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

ஒரு தோசைக்கல் அல்லது வாணலில் சிறிது எண்ணெய் விட்டு (ஆலிவ் எண்ணெயாக இருந்தால் நல்ல வாசனையாக இருக்கும்) தட்டிய பூண்டுகளைப் போட்டு வதக்கவும். அடுத்து ப்ரோக்கலியைச் சேர்த்து மிளகுத்தூளையும் தூவி  தேவையானால் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

இது சாதத்துக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடவோ அல்லது சும்மா அப்படியே சாப்பிடவோ அல்லது பொரியலில் சாதம் போட்டு கிளறி சாப்பிட பூண்டின் சுவையுடன் நன்றாக இருக்கும்.

பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 3 Comments »

ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்

20150120_124052

ப்ரோக்கலி என்றாலே சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால் அதனுடன் இதுமாதிரி உருளை, கடலை போன்றவற்றை சேர்த்து சமைத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்

தேவையானவை:

ப்ரோக்கலி _ 1
சிறிய உருளைக்கிழங்கு _ 1
அவித்த வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
பூண்டுப்பல் _ மூன்றுநான்கு
தேங்காய்ப் பூ
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கியோ அல்லது அப்படியேவோ சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

அவித்த வேர்க்கடலையைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.

ப்ரோக்கலியை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

பூண்டுப்பல்லை தட்டிக்கொள்ளவும்.

இவை எல்லாம் தயாரானவுடன், அடுப்பில் வாணலை ஏற்றித் தாளித்துவிட்டு, தட்டி வைத்துள்ள பூண்டு போட்டு வதக்கிகொண்டு ப்ரோக்கலி, உருளை, வேர்க்கடலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீரை தெளித்தாற்போல் விட்டு மூடி வேகவிட‌வும்.

உருளையும், வேர்க்கடலையும் ஏற்கனவே வெந்திருப்பதாலும், ப்ரோக்கலி சூடு பட்டாலே வெந்துவிடும் என்பதாலும் தண்ணீர் அதிகம் தேவையிராது.

தண்ணீர் சுண்டி மிளகாய்த்தூள் வாசனை போனதும் தேங்காய்ப்பூ & கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

கேரட் & புரோக்கலி பொரியல் / Carrot & Broccoli poriyal

carrot&broccoli poriyal

தேவையானவை:

நடுத்தர அளவிளான புரோக்கலி_1
கேரட்_1
சின்ன வெங்காயம்_இரண்டு அல்லது மூன்று
பச்சை மிளகாய்_ஒன்றிரண்டு
வெந்து பிழியப்பட்ட‌ துவரம் பருப்பு_ ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாம்பாருக்கு வேகவைத்த‌ துவரம் பருப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

கேரட்,புரோக்கலி இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தையும் அவ்வாறே நறுக்கவும்.பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.காரம் விரும்பினால் பொடியாக்கலாம்.

வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,புரோக்கலியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,லேஸாக உப்பு தூவி,சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.கேரட்டும்கூட மெல்லிய துண்டுகளாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.

இவை வெந்ததும் பிழிந்து வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு சூடேறியதும்,தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை தூவி மேலும் ஒரு கிளறுகிளறி இறக்கவும்.இப்போது எளிதாக செய்யக்கூடிய கேரட் & புரோக்கலி பொரியல் தயார்.

இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 9 Comments »

உருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்

 

தேவையானவை:

உருளைக்கிழங்கு _1
ப்ரோக்கலி_1
முழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
பூண்டிதழ்_3
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
சீரகம்
பெருஞ்சீரகம்
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

முழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு  அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்

உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்

கூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்

உருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்

எல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும்  இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும்  இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

இது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

ப்ரோக்கலி

தேவையானவை:

ப்ரோக்கலி_1
மிளகுத்தூள்_சிறிது (காரம் விரும்பினால்)
உப்பு_சிறிது
ஆலிவ் ஆயில்_கொஞ்சம்
விருப்பமான  Ranch dressing

செய்முறை:

ப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

ஒரு Non stick pan ஐ அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டு லேஸாக சூடேறியதும் ப்ரோக்கலியைப் போட்டு வதக்கவும்.இது சீக்கிரமே வதங்கிவிடும்.

வதங்கும்போதே உப்பு,மிளகுத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.

வதக்கல் முடிந்ததும் ஒரு தட்டில் எடுத்துவைத்து விருப்பமான  Ranch dressing யுட‌ன் சாப்பிட சுவையாக இருக்கும்.

மற்றொரு முறையில் செய்வதானால் எண்ணெய்,மிளகுத்தூள் இல்லாமல் உப்பு போட்டு அவித்து சாப்பிட்டாலும் சுவையாகத்தான் இருக்கும்.

சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »