தேவையானப் பொருள்கள்:
மஞ்சள் பட்டாணி_ஒரு கைப்பிடி
மொச்சை_ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம்_5
தக்காளி_பாதி
இஞ்சி_சிறிது
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு
தாளிக்க:
நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன்
சீரகம்
பெருஞ்சீரகம்
அரைக்க:
கசகசா_1/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பூ_ஒரு டீஸ்பூன்
செய்முறை:
பட்டாணி,மொச்சையை முதல் நாளே ஊற வைத்து,குருமா செய்யும்போது சிறிது உப்பு போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,தக்காளி பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும். கசகசா,தேங்காய் இரண்டையும் மைய அரைத்து வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், பெருஞ்சீரகம் தாளித்து,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அது வதங்கியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து வேக வைத்த பட்டாணி,மொச்சையை சேர்த்து வதக்கவும்.பிறகு மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,உப்பு சேர்த்து வதக்கி கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும்.எல்லாம் ஒன்றாகக் கலந்து கொதித்து வெந்ததும் கசகசா,தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதனை சாதம்,சப்பாத்தி,நாண் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம்.