தேவையானப் பொருள்கள்:
அரிசி_2 கப்
கத்தரிக்காய்_5 சிறியது
சின்ன வெங்காயம்_3
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
மஞ்சள் தூள்_1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்_2 டீஸ்பூன்
தேங்காய்ப் பால்_1 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவையான அளவு
எலுமிச்சை சாறு_1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
தாளிக்க:
நல்லெண்ணெய்_2 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_கொஞ்சம்
செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து, முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கிய பின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி உப்பு,தேங்காய்ப்பால் சேர்த்து கிளறி,கத்தரிக்காய் வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.காய் வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறி,கொத்துமல்லி தூவி சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கவும்.
இதற்கு அப்பளம்,வடாம்,உருளைக் கிழங்கு,முட்டை,சிக்கன் இவை எல்லாமே நன்றாக இருக்கும்.