கண்டுபிடிச்சிட்டிங்களா!!!

   

 

படத்தைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லைதானே.படங்களை Zoom in செய்து பார்க்கவும்.நான் பிடித்ததை உங்களாலும் (கண்களால்தான்) பிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்.

இந்தப் படங்கள்  Thanksgiving day (11/22/2012)அன்று வாக்கிங் போகும்போது வழியிலுள்ள பார்க்கின் உள்ளே சென்றபோது சிக்கியவை.

ஷ்ஷ்ஷ்,நல்லா தூங்கறாங்க.சத்தம் போடாமல்(பின்னூட்டம் மட்டும் கொடுத்துவிட்டு)சென்றுவிடுவோமே.

இயற்கை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 17 Comments »

17 பதில்கள் to “கண்டுபிடிச்சிட்டிங்களா!!!”

  1. Mahi Says:

    பல்பூ சூப்பரா எரிஞ்சிருச்சு! வலையில் சிக்கிட்டேன் நானும்! 🙂

    சூப்பரா இருக்கார், எவ்வளவு பொறுமையா வீடு கட்டி இருக்கார்! அது இருக்கட்டும், அவர் தூங்கறார்னு நீங்க எப்படி கண்டுபுடிச்சீங்க சித்ராக்கா? 😉

  2. Mahi Says:

    முதல் படத்தில் இருக்கும் மேப்பில் இலைகள் ரொம்ப நல்லா இருக்கு!

    • chitrasundar5 Says:

      “அவர் தூங்கறார்னு நீங்க எப்படி கண்டுபுடிச்சீங்க சித்ராக்கா”_____ஏதாவது இரண்டு வரிகளைப்போட்டு நிரப்ப‌ வேண்டுமே,அதற்காகத்தான். பார்ப்பதற்கு ஏதோ கயிறு ஊஞ்ஜலில் படுத்திருப்பதுபோலவே இருந்தது.

      “மேப்பில் இலைகள் ரொம்ப நல்லா இருக்கு”__கையை அசைக்காம எடுத்தா,படம் அழகா வரும்னு போகப்போக‌த்தானே தெரியுது.வருகைக்கு நன்றி மகி.

  3. Dr.M.K.Muruganandan Says:

    மிகச் சிறப்பான படப்பிடிப்பு
    சிலந்தி வலையில் சிலந்தி
    அற்புதம்

    • chitrasundar5 Says:

      Dr.M.K.Muruganandan ஐயா,

      என்ன எழுதுவது என ஏதேதோ யோசித்து,பிறகு எதையோ கிறுக்கி வைத்தேன்.ஆனால் மூன்றே வார்த்தைகளில் (சிலந்தி வலையில் சிலந்தி) அற்புதமாக சொல்லிவிட்டீர்கள்.அழகான இந்த கவிதைக்கு நன்றி ஐயா!

  4. ranjani135 Says:

    மேப்பிள் இலைகள் பற்றி அமெரிக்கா போய் வந்த என் அக்கா நிறையச் சொல்லி இருக்கிறாள். எத்தனை அழகு!
    அந்த இயற்கை அழகில் சொக்கிப்போய் தான் சிலந்தியாரும் மோனத் தவம் இருக்கிறாரோ?
    டாக்டரிடமிருந்து கவிதை வாங்கி உங்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டார் திருவாளர் சிலந்தியார்!
    பாராட்டுக்கள்!

    • chitrasundar5 Says:

      ரஞ்ஜனி,

      மேப்பிள் இலைகள் பச்சையாக இருக்கும்போதும்,நிறம் மாறும்போதும் அழகுதான்.உங்க அக்கா இங்க வந்துட்டு போனாங்களா.

      ஆமாம்,டாக்டர் ஐயா அழகா இரண்டுமூன்று வார்த்தைகளில் கவிதையாக சூப்பரா சொல்லிவிட்டார்.மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

      “பாராட்டுக்கள்!”____எனக்கா?சிலந்திக்கா?வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி!

  5. chollukireen Says:

    அன்புள்ள சித்ரா சிலந்தி உன் வலையில் சிக்கிக்கொண்டது ஸந்தோஷம். அழகான வலைப்பின்னல். அதனாலே அழகான வலைப் பூவிற்கு போஸ் கொடுத்திருக்கு. என்னிடம் அப்படித்தான் சொல்லியது. அழகாயிருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,வாங்கவாங்க!எல்லார் மாதிரியும் நீங்களும் வந்து வசமா சிக்கிட்டீங்க.இனி விடமாட்டோமில்ல.

      நம்ம ஊர்ல குட்டிகுட்டியாதான் சிலந்திவலை பார்த்திருக்கிறேன்.ஆனால் இங்கு பெரியதாக இருக்கவும்தான் படம் எடுத்தேன்.வலையின் நூல்கூட தரை வரை இருந்தது.

      “அழகான வலைப்பின்னல்.அதனாலே அழகான வலைப் பூவிற்கு போஸ் கொடுத்திருக்கு.என்னிடம் அப்படித்தான் சொல்லியது”___ரகசியத்தைப் போட்டு ஒடச்சிட்டாங்கன்னு போய் சொல்லிடறேன்.நீங்க எழுதிய வரிகள் இன்னும் அழகு சேர்க்கிறது.அன்புடன் சித்ரா.

  6. faizakader Says:

    அருமையாக படம் எடுத்திருக்கிங்க.. சூப்பர்

    ongoing event: kids drawing contest- win cash prizes http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html

  7. Gnanaguru Says:

    padangal miga arumai…ungal pugaipadangalai parkum pothu unga camera vum gyabagam varuthu..athaiyum oru pugaipadam eduthu anupungal 🙂 then oru doubt..zoom in panni parkanuma illa zoom out ah..basic ah irunthalum vilakkam alikavum..nandri

    • chitrasundar5 Says:

      ஞானகுரு,

      வருகைக்கு நன்றி.காமிராவின் படம் வேணுமின்னா இன்னொரு காமிரா வாங்கியாக வேண்டும்.அதுவுமில்லாம யாரோ கண்ணு வச்சிட்டாங்க!கொஞ்ஜம் தேறி வரட்டுமே.நானும் ப்ளாக் ஆரம்பித்ததிலிருந்தே புது காமிரா வேண்டும் என இவரை நச்சரிச்சிட்டிருக்கேன்.பார்க்கலாம்.இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் தெரியும்.

      Zoom in க்கு மாத்திட்டேங்க.நன்றி.

      • Gnanaguru Says:

        .நானும் ப்ளாக் ஆரம்பித்ததிலிருந்தே புது காமிரா வேண்டும் என இவரை நச்சரிச்சிட்டிருக்கேன்// haha nice..puthu camera vangi kodukura varaikum vidathinga…puthu camera vanga vazhlthukal 🙂 nandri.

      • chitrasundar5 Says:

        ஞானகுரு,

        “இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் தெரியும்”___இதைப் படித்தபிறகுமான வாழ்த்திற்கு நன்றி.

  8. Rajalakshmi paramasivam Says:

    அழகான சிலந்தி வலை .அதை விட அழகு அதை ஒரு பதிவாக அச்சிட்டது .
    அதை பார்த்ததும் மாவீரன் நெப்போலியன் கதை நினைவுக்கு வந்தது.
    பகிர்வுக்கு நன்றி.
    ராஜி

    • chitrasundar5 Says:

      ராஜி,

      சிலந்திவலை நல்லா பெருசா இருக்கவும் ‘க்ளிக்’கிட்டேன்.அது நெப்போலியன் கதையை நினைவுக்கு கொண்டுவந்ததில் மகிழ்ச்சி.பாராட்டுக்கு நன்றிங்க‌.


மறுமொழி இடுக‌